Advertisement

மே 3 க்கு பிறகு ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அதிகாரிகள் அறிவிப்பு

மே 3 பிறகு நிறைவடையும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்கள் உடல் நேற்று ஆலோசனை நடத்தினார் மார்ச் 22ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்கள் உடன் நடத்தும் நான்காவது காணொளி கூட்டம் இதுவாகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு ஆலோசனைகள் பங்கேற்ற தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு நாள் தடுப்பு நடவடிக்கைகளை அவர் விளக்கினார்.

பெரும்பாலான முதலமைச்சர்கள் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அதேசமயம் சிவப்பு மண்டலங்களில் கண்டிப்பாக ஊரடங்கு தொடரும் என பிரதமர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து சிவப்பு மண்டலம் அல்லாதவர்களுக்கு ஒரு சில தளர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட குறிப்பிட்ட சில துறைகளுக்கான தடைகள் மட்டும் முழுமையாக தொடரும் என கூறப்படுகிறது அதன்படி நோய் தீவிர தன்மையின் அடிப்படையில் பச்சை மண்டல பகுதிகளில் குறைந்த அளவிலான தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் தினமும் குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் மற்றும் விமான சேவைகள் மே மாத மத்தியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கல்வி நிலையங்களில் வணிக வளாகங்கள் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயக்கத்திற்கான தடைகள் தொடரும் எனவும் மக்கள் அதிக அளவில் வாய்ப்பு உள்ளபோது மற்றும் சமூக கூட்டங்கள் நடத்துவதற்கான தடையும் மே 3 க்கு பின்னரும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்துள்ள அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதிக்கவும் முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் மத்திய அரசு தேவையான நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இந்த வார இறுதிக்குள் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என அரசு அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

admin

Recent Posts

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

2 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago