தமிழக நலன் கருதி தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் சென்றார். அங்கு சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு, நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய அவர், “ பல வருடங்களாக மக்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. 5 வயது முதல் நடிப்பில் இருக்கிறேன். பலர் கை தூக்கி விட்ட நிலையில் தான் இந்த மேடையில் இருக்கிறேன். நெகிழ்ந்து இருக்கிறேன்.
தொண்டர்கள் அன்பு, செயல் வடிவமாக மாற வேண்டும். இது தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய யாத்திரை வெற்றி பெறும். தேவைப்பட்டால் தமிழகத்தில் நலன் கருதி ரஜினியுடன் இணைவேன் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எப்போது இணைவோம் என்று தேதியெல்லாம் சொல்ல முடியாது. அப்படி இணையும்போது அதில் எங்கள் நட்பை விட முக்கியமான செய்தியாக தமிழகத்தின் நலன் இருக்கும் என்பதுதான்” என தெரிவித்தார்.
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More