Advertisement
Categories: Uncategorized

ரஜினியோடு இணைவது எப்போது..?: கமல்ஹாசன் விளக்கம்

தமிழக நலன் கருதி தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் சென்றார். அங்கு சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு, நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய அவர், “ பல வருடங்களாக மக்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. 5 வயது முதல் நடிப்பில் இருக்கிறேன். பலர் கை தூக்கி விட்ட நிலையில் தான் இந்த மேடையில் இருக்கிறேன். நெகிழ்ந்து இருக்கிறேன்.

தொண்டர்கள் அன்பு, செயல் வடிவமாக மாற வேண்டும். இது தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய யாத்திரை வெற்றி பெறும். தேவைப்பட்டால் தமிழகத்தில் நலன் கருதி ரஜினியுடன் இணைவேன் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எப்போது இணைவோம் என்று தேதியெல்லாம் சொல்ல முடியாது. அப்படி இணையும்போது அதில் எங்கள் நட்பை விட முக்கியமான செய்தியாக தமிழகத்தின் நலன் இருக்கும் என்பதுதான்” என தெரிவித்தார்.

admin

Recent Posts

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்…

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More

4 hours ago

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

22 hours ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

4 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

1 month ago