தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகன்.
சுரேஷ் பாபு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்தில் ராமநாயுடு படப்பிடிப்பு தளம், ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் அலுவலகம் உள்பட 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 
													
																							 
																								
												
												
												 
						 
					 
						 
					 
						 
					 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						