Advertisement

விவசாய பொருட்களை வாங்க மானிய விலையில் மத்திய அரசு புதிய அதிரடி திட்டம்

விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

ஸ்மாம் கிசான் யோஜ்னா (SMAM Kisan Yojana) என்பதுதான் அந்தத் திட்டத்தின் பெயர்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்களை எளிதில் பெற மத்திய அரசு உதவுகிறது.

மேலும், அவற்றை 50% முதல் 80% வரை மானிய விலைகளில் விவசாயிகள் பெறவும் இந்தத் திட்டம் கைகொடுக்கிறது.

இந்த ஸ்மாம் கிசான் யோஜ்னா திட்டத்திற்காக ரூ.553 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

பெண் விவசாயிகள் உள்பட நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 

ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலம் தொடர்பான ஆவணம், வங்கி பாஸ் புத்தகம், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, பேன் கார்டு, பாஸ்போர்ட் – இவற்றில் ஒன்று), ஜாதி சான்றிதழ் (SC/ST/OBC ஆகியோருக்கு மட்டும்) ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

https://agrimachinery.nic.in/ என்ற இணையதளத்தில் நுழைந்து, அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago