மே இறுதியில் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 38 ஆயிரம் பேர் சாவு: பீதி கிளப்பிய கணிப்பை பொய்யாக்கிய ஊரடங்கு
நிபுணர்களையே குழப்பிவிட்ட கொரோனா.
புதுடெல்லி:
‘மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’ என நாட்டின் நான்கு முக்கிய அமைப்புகள் கடந்த மாதம் கூறிய கணிப்பு பொய்யாகி இருக்கிறது.
அதில், ‘கொரோனாவால் இப்போது (ஏப்ரல்) பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்ததில் மே மாதம் இறுதியில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.35 லட்சமாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கை 38,220 ஆக உயரக்கூடும். மே 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 3,258 பேரும், மே 12ம் தேதி வரையிலான 2வது வாரத்தில் 10,924 பேரும், மே 19ம் தேதி வரையிலான 3 வாரத்தில் 38,220 பேரும் இறப்பார்கள். எனவே, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 76 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கு தற்காப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போதுமான எண்ணிக்கையில் இருப்பு வைத்துக்கொள்வது அவசியம்,’ என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கூட தாண்டவில்லை. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்குள் உள்ளது. சில நேரங்களில், மெத்த படித்தவர்களின் கணிப்புகள் பொய்யாகும் என்பதற்கு இந்த ஆய்வறிக்கை ஒரு உதாரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More