எஸ்பிஐ ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து வசூலிக்கிறது. ஏன் வசூலிக்கிறது? என இந்த செய்தியில் பார்க்கலாம்.
சரிபார்க்கும்போது எந்த ஒரு பண பரிவர்த்தனையும் செய்யாமல் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.236 எடுக்கப்பட்டுள்ளதை அல்லது பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா?
நீங்கள் பயன்படுத்தி வரும் டிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவை கட்டணத்தின் கீழ் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எஸ்பிஐ பணம் எடுத்துக் கொள்கிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை கிளாசிக், சில்வர், குளோபல் அல்லது காண்டாக்ட்லெஸ் கார்டுகள். இந்த கார்டுகளுக்கு வங்கி ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.200 வசூலிக்கிறது.
ஏடிஎம் சேவை கட்டணம்
ஏஎம்சி எனப்படும் ஏடிஎம் சேவை கட்டணம் ரூ.200 என்றால், எஸ்பிஐ ஏன் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.236 கழித்தது? என நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், வங்கியால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டியை விதிக்கிறது. எனவே எஸ்பிஐ இந்த ஜிஎஸ்டியையும் வாடிக்கையாளரின் சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக் கொள்கிறது. எனவே ரூ.200 ஏடிஎம் சேவை கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி தொகை ரூ.36ஐயும் சேர்த்தால் மொத்தமாக ரூ.236 உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
எஸ்பிஐ மட்டுமல்ல இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி என பொதுத்துறை வங்கிகளும், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ என பல்வேறு தனியார் வங்கிகளும் ஏடிஎம் சேவைக்கு ஆண்டுதோறும் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இந்த கட்டணம்