Advertisement
Categories: Service

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்

PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா. பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? விவசாயிகள் இப்போது என்ன செய்ய வேண்டும்? PM Kisan Latest News: பிஎம் கிசான் பயனாளியா நீங்கள்? 20வது தவணைக்காக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கான முக்கிய அப்டேட் இதோ. PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்.. PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் 20வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது. கடந்த சில நாட்களாக, ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணையான ரூ. 2000 வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஜூன் மாதமும் இதற்காக காத்திருந்து விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? - பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை. - இது விவசாயிகளுக்கு மேலும் குழப்பத்தை அளித்துள்ளது. - எனினும், இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம் கிசான் திட்டம்: 4 மாதங்களுக்கு ஒரு முறை தவணை - பிஎம் கிசான் சம்மான் திட்டத்தில் இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு தவணை என்ற வீதம், ஒவ்வொரு தவணையிலும் தலாம் ரூ.2,000 அளிக்கப்படுகின்றது. - இதற்கு முந்தைய 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று வந்தது. இப்போது ஜூலை மாதத்தின் கடைசி வாரம் வரவுள்ளது. - அதாவது 19வது தவணை வந்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. - ஆனால் 20வது தவணைக்கான தேதி அல்லது அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. - இது விவசாயிகளிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியின் மோதிஹரி பேரணியிலில் அறிவிப்பு வரவில்லை ஜூலை 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் உள்ள மோதிஹரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை குறித்து ஒரு பெரிய அறிவிப்பு வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். பேரணியில், பிரதமர் மோடி ரயில், சாலை, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல்…

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் 20வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது. கடந்த சில நாட்களாக, ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணையான ரூ. 2000 வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஜூன் மாதமும் இதற்காக காத்திருந்து விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

  • பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை.
  • இது விவசாயிகளுக்கு மேலும் குழப்பத்தை அளித்துள்ளது.
  • எனினும், இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

YOU MAY ALSO LIKE

பிஎம் கிசான் திட்டம்: 4 மாதங்களுக்கு ஒரு முறை தவணை

  • பிஎம் கிசான் சம்மான் திட்டத்தில் இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு தவணை என்ற வீதம், ஒவ்வொரு தவணையிலும் தலாம் ரூ.2,000 அளிக்கப்படுகின்றது.
  • இதற்கு முந்தைய 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று வந்தது. இப்போது ஜூலை மாதத்தின் கடைசி வாரம் வரவுள்ளது.
  • அதாவது 19வது தவணை வந்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.
  • ஆனால் 20வது தவணைக்கான தேதி அல்லது அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
  • இது விவசாயிகளிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடியின் மோதிஹரி பேரணியிலில் அறிவிப்பு வரவில்லை ஜூலை 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் உள்ள மோதிஹரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை குறித்து ஒரு பெரிய அறிவிப்பு வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். பேரணியில், பிரதமர் மோடி ரயில், சாலை, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ரூ.7200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தனது உரையில், விவசாயிகளின் வருமானம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் உறுதியாகக் கூறினார். இதுவரை சுமார் ரூ.3.5 லட்சம் கோடி பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக சென்றடைந்துள்ளதாக அவர் கூறினார். மோதிஹாரியின் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற ‘பிரதான் மந்திரி தன்-தன்யா கிரிஷி யோஜனா’ பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயத்தில் பின்தங்கிய 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 1.75 கோடி விவசாயிகள் இதன் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை பீகாரைச் சேர்ந்தவை.

எனினும், இந்த உரையில் பிஎம் கிசான் 20வது தவணை குறித்த அறிவிப்பு எதுவுமே வரவில்லை. ஆகையால் விவசாயிகளின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.

விவசாயிகள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பிஎம் கிசான் 20வது தவணை இன்னும் சில நாட்களில் வங்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குள் பயனாளி விவசாயிகள், எந்த சிக்கலும் இல்லாமல் இந்த தவணை தங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா: இவை அனைத்தும் சரியாக இருப்பது அவசியம்

  • Beneficiery Status: PM Kisan வலைத்தளமான pmkisan.gov.in -க்கு சென்று பயனாளியின் நிலையைச் சரிபார்க்கவும்
  • e KYC, Aadhaar, Bank Details: e-KYC, ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களைப் புதுப்பிக்கவும்
  • Farmer Registry: விவசாயி பதிவேடு மற்றும் நில சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்
  • Duplicate Registration: நகல் பதிவு அல்லது தவறான தகவல்கள் உள்ளனவா என்பதை செக் செய்யவும்.

இவை அனைத்தும் சரியாக இருந்தால், அரசு 20வது தவணையை வெளியிட்டவுடன் அது உங்கள் கணக்கில் தானாக வந்து சேரும்

Website post link 👇Must watch*PM KISAN

WEBSITE LINK 👇https://pmkisan.gov.in

admin

Recent Posts

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

4 days ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

6 days ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 week ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 week ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

2 weeks ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 months ago