Advertisement
Service

Post Office Grama Suraksha Yojana Offers Rs 35 Lakh Returns Check Here Details

ரூ. 35 லட்சம் வருமானம் தரும் சூப்பரான திட்டம்.. ரூ. 1500 முதலீடு செய்தால் போதும்!

இந்திய அஞ்சல் துறை அனைவருக்கு ஏற்ற பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமப்புற மக்களுக்காக பிரபலமானதாக கிராம சுரக்ஷா யோஜனா உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் பலன்கள் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

தபால் அலுவகலம் சேமிக்க விரும்புகிறவர்களுக்கு பலவிதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கு ஏற்ற விதமான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. இதில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்யும் போது, முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெறலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சேமிக்க விரும்பும் நிலையில், போஸ்ட் ஆபீஸில் நல்ல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பான டெபாசிட், நல்ல வருமானம் தபால் அலுவலக திட்டங்களில் கிடைக்கும். அத்துடன் கூடுதல் சிறப்பாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் கிடையாது. அஞ்சல் அலுவலத்தில் கிராப்புற மக்களுக்காக கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் உள்ளது.

போஸ்ட் ஆபீஸில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரத்யேகமாக கிராப்புற மக்களுக்காக இந்த திட்டம் உள்ளது. தினந்தோறும் 50 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக, மெச்சூரிட்டியாக ரூ. 35,00,000 தொகையை முதலீட்டாளர் பெறலாம்.

19 வயது முதல் 55 வயதான யாராக இருந்தாலும் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும் இந்த திட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம சுரக்ஷா யோஜனாவில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் தினமும் ஐம்பது ரூபாய் வீதம் மாதந்தோறும் ரூ.1,500 ஒருவர் டெபாசிட் செய்யும் போது ரூ. 35 லட்சம் வரை ரிட்டனாக பெறலாம். 55 ஆண்டுகளுக்கு என்றால் மாதம் ரூ.1,515 தொகையும், 58 ஆண்டுகளுக்கு 1,463 ரூபாய் மாதந்தோறும் முதலீட்டாளர் டெபாசிட் செய்யலாம். 60 ஆண்டுகளுக்கு ஒருவர் 1,411 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.

கிராம் சுரக்ஷா யோஜனாவில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெரும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. பாலிசி துவங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம். 5 வருடங்களுக்கு பிறகு போனஸ் தொகையும் இந்த திட்டத்தில் பெறலாம். கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர் 80 வயதை நிறைவு செய்யும் போது, மொத்த பாலிசி தொகையும் சரண்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Share
Published by
admin

Recent Posts

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ – பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More

1 month ago