இந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம் பேருக்கு விநியோகம் செய்து, மார்ச் மாத இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டத்தை வரும் டிசம்பர் 3வது வாரம் தொடங்க தமிழக அரசு தீவிரமாக திட்டமிட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா வரும் டிசம்பர் 19 அல்லது 20-ம் தேதி நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
திட்டத்தின் பின்னணி மற்றும் இலக்குகள்
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாநிலத்தின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதல்கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொள்முதல் மற்றும் நிறுவனங்கள்
இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியது. இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் அசர், டெல், எச்.பி. ஆகிய மூன்று நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரியதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மடிக்கணினியையும் தமிழக அரசு ரூ. 21,650-க்கு கொள்முதல் செய்கிறது.
தேர்வு செய்யப்பட்ட இந்நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஒரு வருட உத்தரவாதத்தையும், குறைந்தபட்சம் மூன்று வருட சேவையையும் வழங்க வேண்டும்.மடிக்கணினியின் சிறப்பு அம்சங்கள்எல்காட் நிறுவனம் நிர்ணயித்த விதிமுறைகளின்படி, வழங்கப்படும் மடிக்கணினிகள் பின்வரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்:திரை அளவு: 14 அங்குலம் அல்லது 15.6 அங்குலம்.ரேம் மற்றும் சேமிப்பு: 8 ஜிபி டிடிஆர் 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி (SSD) ஹார்ட் டிஸ்க்.
இயங்குதளம்: விண்டோஸ் 11.பேட்டரி: குறைந்தபட்சம் 5 மணிநேரம் தாங்கும் 4 அல்லது 6 செல்கள் அடங்கிய லித்தியம் அயன் பேட்டரி.பிற அம்சங்கள்: ப்ளூடூத் 5.0 வெர்ஷன், 720 பிக்சல் எச்டி கேமரா, 3 யூஎஸ்பி போர்ட்டுகள் (ஏதேனும் ஒன்று 3.0 வெர்ஷனில் இருக்க வேண்டும்) மற்றும் கீபோர்டில் தமிழ் எழுத்துகள் கட்டாயம்.விநியோக காலக்கெடுஇந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம் பேருக்கு விநியோகம் செய்து, மார்ச் மாத இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More
யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல்… Read More
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More