இந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம் பேருக்கு விநியோகம் செய்து, மார்ச் மாத இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டத்தை வரும் டிசம்பர் 3வது வாரம் தொடங்க தமிழக அரசு தீவிரமாக திட்டமிட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா வரும் டிசம்பர் 19 அல்லது 20-ம் தேதி நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
திட்டத்தின் பின்னணி மற்றும் இலக்குகள்
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாநிலத்தின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதல்கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொள்முதல் மற்றும் நிறுவனங்கள்
இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியது. இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் அசர், டெல், எச்.பி. ஆகிய மூன்று நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரியதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மடிக்கணினியையும் தமிழக அரசு ரூ. 21,650-க்கு கொள்முதல் செய்கிறது.
தேர்வு செய்யப்பட்ட இந்நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஒரு வருட உத்தரவாதத்தையும், குறைந்தபட்சம் மூன்று வருட சேவையையும் வழங்க வேண்டும்.மடிக்கணினியின் சிறப்பு அம்சங்கள்எல்காட் நிறுவனம் நிர்ணயித்த விதிமுறைகளின்படி, வழங்கப்படும் மடிக்கணினிகள் பின்வரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்:திரை அளவு: 14 அங்குலம் அல்லது 15.6 அங்குலம்.ரேம் மற்றும் சேமிப்பு: 8 ஜிபி டிடிஆர் 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி (SSD) ஹார்ட் டிஸ்க்.
இயங்குதளம்: விண்டோஸ் 11.பேட்டரி: குறைந்தபட்சம் 5 மணிநேரம் தாங்கும் 4 அல்லது 6 செல்கள் அடங்கிய லித்தியம் அயன் பேட்டரி.பிற அம்சங்கள்: ப்ளூடூத் 5.0 வெர்ஷன், 720 பிக்சல் எச்டி கேமரா, 3 யூஎஸ்பி போர்ட்டுகள் (ஏதேனும் ஒன்று 3.0 வெர்ஷனில் இருக்க வேண்டும்) மற்றும் கீபோர்டில் தமிழ் எழுத்துகள் கட்டாயம்.விநியோக காலக்கெடுஇந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம் பேருக்கு விநியோகம் செய்து, மார்ச் மாத இறுதிக்குள் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More
PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More
TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More