Advertisement
Categories: Uncategorized

ஆடு, மாடு, கோழிகளுக்கு இழப்பீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்

தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுக்கு ரூ.37,500, ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உறுப்பின கே.சி.கருப்பணன் (அதிமுக) பேசினார். இதே பொருள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்த்தை ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வானதி சீனிவாசன் (பாஜக) பேசினர். உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, “தமிழகம் முழுவதுமே தெருநாய், வெறிநாய் தொந்தரவுகள் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, காலையில் நடைப்பயிற்சி செல்பாவ்ர்கள் கூட தெருநாய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து, அதே பகுதியில் மீண்டும் கொண்டு வந்து விடுகின்றனர். ஆனால், நிறைய இடங்களில் என்ன பிரச்சினை என்றால், கருத்தடை சிகிச்சைக்கு அரசு கொடுக்கும் பணம் போதவில்லை. அதனால், நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்ய மாட்டோம் என்று மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், கருத்தடை சிக்சிசைக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது: சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

அதனடிப்படையில், மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய, கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் இழப்பீடு வழங்கிட முதல்வர் இன்று (நேற்று) காலை ஆணையிட்டுள்ளார். அதன்படி, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு ரூ.37,500, வெள்ளாடு – செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ.4,000, கோழி ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு ரூ.42 லட்சத்து 2,600 இழப்பீடாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

2 days ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

5 days ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

5 days ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 week ago

ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை – எப்படி பெறுவது?

ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More

1 week ago

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More

2 weeks ago