உங்களுடைய ஆதார் கார்டை வைத்தே நீங்கள் 10,000 ரூபாய் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
நம் அனைவருக்குமே திடீரென்று பணத் தேவை ஏற்படும். அதைச் சமாளிக்க தெரிந்தவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கடன் வாங்குவோர்கள் உள்ளனர். ஆனால் பெரிய அளவிலான தேவைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். நமக்கு பணத் தேவை ஏற்படும் போது நமக்கு ஆதார் கார்டு இருந்தாலே போதும். அதை வைத்தே கடன் வாங்கலாம். ஆதார் கார்டு மூலம் நீங்கள் எளிதாக 10,000 ரூபாய் வரை கடன் வாங்க முடியும்.
இந்தக் கடனை நீங்கள் எளிதாகப் பெறலாம். அதோடு, ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதாவது மொத்தமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதும் இந்தக் கடனின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம். மேலும், இந்த 10,000 ரூபாய் கடன் வாங்க நீங்கள் எந்த பிணையமும் உத்தரவாதமும் அளிக்க வேண்டியதில்லை.
ஆதார் கார்டில் ரூ.10,000 கடன் கிடைக்கும். இது தனிநபர் கடன் ஆகும். தனிநபர் கடனில், ஆதார் அட்டையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கேட்கப்படுவதில்லை. அடையாளச் சான்றாக ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. 10,000 உடனடியாக உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதனுடன் உங்கள் பான் கார்டையும் வழங்கினால் இந்தத் தொகையை மேலும் அதிகரிக்கலாம். அடுத்து வரும் நாட்களில் நீங்கள் அதிக கடன் தொகை பெறலாம்.
அரசு வங்கிகள் மிகக் குறைவான வட்டியில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆவணங்களின் அடிப்படையில் தனியார் வங்கிகள் உங்களுக்கு எளிதாக கடன் வழங்க முடியும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் ஆதார் அட்டையின் உதவியுடன் NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) மற்றும் Fintech தளங்களின் உதவியுடன் தனிநபர் கடனைப் பெறலாம்.
ஆதார் அட்டையின் உதவியுடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் Fintech தளத்தில் தனிநபர் கடனைப் பெறலாம். இதைச் செய்ய, நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனமான NBFC மற்றும் Fintech தளத்தின் மொபைல் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
ஆதார் கார்டின் உதவியுடன் கடனைப் பெற, உங்கள் வயது 21 முதல் 60க்குள் இருக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்தக் கடனைப் பெற வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்த வழியில் நீங்கள் 10,000 ரூபாய் வரை ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம்.
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More
பிரிவினர்களுக்கு கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்தற்போது, மொத்தம் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்… Read More
தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுக்கு ரூ.37,500, ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More
தமிழ்நாடு அரசு பொது சுகாதார ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th, 12th, Degree தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம்… Read More