GOVT JOBS

குட் நியூஸ்! பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை! அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!

தனியார் கம்பெனியில் வேலை வாய்ப்பு

Website Link

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்

கடந்த 2013 -ம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

மேலும், அவர்கள் அனைவரும் சுமார் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பணி ஆணைக்காக காத்துக் கொண்டுள்ளனர் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 7 வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், இந்த ஆண்டோடு சான்றிதழ் நேரம் காலாவதியாகிறது.

இதனால், பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top