
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 2021 தைப்பொங்கலன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும், ஜனவரி 4ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
