கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கும்.
![](http://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/1080x633__DHQ_/fetchdata16/images/42/62/72/426272a62cfec88d2c799cb92eb4699f942eba955710fbe79a85d5ddb174bcf4.webp)
ஞாயிற்றுக்கிழமை உஉணவகங்களில் பார்சல் மட்டும் வாங்கிச் செல்லலாம்.
அமர்ந்து சாப்பிட முடியாது. ஞாயிறு அன்று காய்கறி கடைகள் திறந்திருக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படும்.
தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்.
![](http://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/1080x633__DHQ_/fetchdata16/images/56/07/b7/5607b7f82955486bb6925e14743422d971e4afc931d23f81f0f43357e2d34216.webp)
சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. திருவிழா, குடமுழுக்கு நடத்தக்கூடாது.
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
திரையரங்கு விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கின் போது தனியார் பஸ், ஆட்டோ, கார் செல்ல அனுமதி இல்லை.
![](http://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/1080x633__DHQ_/fetchdata16/images/16/1d/3d/161d3df4178626c450e2d2f3e583948d589114031b9960db31e1aabc3d5459bd.webp)
ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் செயல்படாது. ஞாயிறு அன்று பால், பத்திரிகை விநியோகம், அமரர் ஊர்திகளுக்கு அனுமதி உண்டு.
ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)