Social Activity

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இன்று முதல்வருடன் ஆலோசனை

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன்  அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனைக்குப் பிறகு  அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அப்படியே தேர்வு நடைபெற்றாலும் ஒரு தித்திப்பான செய்தி:
ஒவ்வொரு கல்வியாண்டிலும் சுமார் 3000 மையங்களில் பொது தேர்வு நடத்தப்படுவது வழக்கம் மூன்று மாதமாக தள்ளிப்போன பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் தேர்வுத்துறை சிறப்புச் சலுகைகளை படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கூடுதல் பலம்.
விடைத்தாள் திருத்தும் பணியில் கடுமை காட்ட வேண்டாம் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்.
95 சதவீதம் முதல் 97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறச் செய்ய நடவடிக்கை என தகவல் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top