Social Activity

ரேஷன் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்காக 13.48 கோடி முகக்கவசங்கள் வாங்கப்படவுள்ளன. இந்த முகக்கவசங்களை வாங்குவதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top