தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்தன.
கடுமையான ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே வேறு வழியில்லாமல் தொழில் துறையை மீண்டும் திறந்துவிட்டுள்ளனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பல்வேறு வகையான தொழிலகங்கள் துவக்கப்பட்டு இயல்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் கடந்த மே 11-ம் தேதி முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/252918411bd3a40f9353d7efb3e2bef2406a7c820bd8433b03b66e364b3671c2ad0a5bb41-704x1024.jpg)
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/9939955310f57d38c4c45b764d5a634f313d24dc5bd255363787a1d0f75a2aef8573734d-658x1024.jpg)
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/167310439ca041665f16ffea1b50b958694f76cb20359a5af3f036958b4503506169165e0-927x1024.jpg)
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)