தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி, ஓய்வூதியம், மற்றும் சொந்த வீடு கட்ட மானியம் போன்ற சலுகைகள் கிடைக்கும். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் இதைப் பெறலாம்.

தொழிலாளர் நல வாரியத்தில் – முக்கியமான அரசு சலுகைகள்:
- கல்வி உதவித்தொகை: தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு (தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு வரை) கல்வி உதவித்தொகை.
- திருமண நிதியுதகை: உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் திருமணங்களுக்கு அரசு நிதியுதவி.
- மகப்பேறு உதவி: பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்திற்கான நிதி உதவி.
- ஓய்வூதியம்: 60 வயது பூர்த்தியான உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் முடக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம்.
- வீட்டு வசதி திட்டம்: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ₹4,00,000 வரை அரசு மானியம் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி கடன்கள்.
- இறப்பு & விபத்து நிவாரணம்: இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி, விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உறுப்பு இழப்பிற்கு அதிகபட்ச இழப்பீடு.
- கண்ணாடி உதவித்தொகை: தொழிலாளர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க நிதி உதவி.
தொழிலாளர் நல வாரியத்தில் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளமான Tamil Nadu Unorganised Workers Welfare Board பக்கத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Registration’ (பதிவு) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் சரியான கைபேசி எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையவும்.
- கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, உங்கள் அடையாள அட்டை, சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, தொழிலாளர் உதவி ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நிரந்தர பதிவு அட்டை மற்றும் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.