Advertisement
Categories: Service

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை நீரை சேமித்து பயன் பெற வேண்டும் என தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொள்ளாச்சி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழை நீர் சேமிப்புக்கு வேளாண்துறையில் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மழை நீரை சேமிக்க, பண்ணைக்குட்டைகள் அமைத்தல், சிறு குளம் வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், சம உயர வரப்பு அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன. இவற்றில் விவசாயிகளுக்கு அதிக பலன் தருவது, மழை நீரை முழுவதுமாக வீணாக்காமல் விளைநிலங்களுக்கே அளிக்கக்கூடியதாக இருப்பது பண்ணை குட்டைகள் ஆகும். அனைத்து விவசாய நிலங்களில், 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, அதன்மேல் மழை நீரை சேமித்து வைத்துக்கொள்ள மானியம் வழங்கப் படுகிறது. 300 மைக்ரான் அடர்த்தியுள்ள பாலித்தீன் சீட் கொண்டு பண்ணைக்குட்டை அமைக்க  ரூபாய் 75,000 மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.

மானியத்துடன் கூடிய பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை  தொடர்பு கொள்ளலாம். மேழும் விண்ணப்பிக்கும் போது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரை பட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறார்கள். திட்டம் குறித்த விரிவான தகவல்களை பெற 96775 84169, 99420 56460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

admin

Recent Posts

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

5 days ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

7 days ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 week ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 week ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

2 weeks ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 months ago