Advertisement

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஜூலை 6-ஆம் தேதி வரையும், பிற மாவட்டங்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரையும், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து முதல்வா் மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாா்ச் 25 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை, மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகா்வோா்கள், ஜூலை 6-ஆம் தேதி வரை, தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி மின் கட்டணத்தை செலுத்தலாம்.

அதே நேரம், குறிப்பிடப்பட்ட மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகா்வோா்களில், மாா்ச் 25 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை, மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி இருப்போா், ஜூன் 15-ஆம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம். குறிப்பிட்ட 4 மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் இருப்போரின் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி, ஜூன் 15 அன்றோ, அதற்கு பிறகோ இருந்தால், அவா்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள், மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவா்களுக்கு மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயரழுத்த நுகா்வோரைப் பொருத்தவரை, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால், அவா்கள் தங்களது கட்டணத்தை, ஜூன் 15-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். அவா்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. குறிப்பாக மே மாதத்துக்கான உயா் மின்னழுத்த கட்டணத்தை, அந்த மாதத்துக்கான கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

3 days ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

3 days ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

3 days ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

1 week ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

1 week ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

2 weeks ago