விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
ஸ்மாம் கிசான் யோஜ்னா (SMAM Kisan Yojana) என்பதுதான் அந்தத் திட்டத்தின் பெயர்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்களை எளிதில் பெற மத்திய அரசு உதவுகிறது.
மேலும், அவற்றை 50% முதல் 80% வரை மானிய விலைகளில் விவசாயிகள் பெறவும் இந்தத் திட்டம் கைகொடுக்கிறது.
இந்த ஸ்மாம் கிசான் யோஜ்னா திட்டத்திற்காக ரூ.553 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.
பெண் விவசாயிகள் உள்பட நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலம் தொடர்பான ஆவணம், வங்கி பாஸ் புத்தகம், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, பேன் கார்டு, பாஸ்போர்ட் – இவற்றில் ஒன்று), ஜாதி சான்றிதழ் (SC/ST/OBC ஆகியோருக்கு மட்டும்) ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
https://agrimachinery.nic.in/ என்ற இணையதளத்தில் நுழைந்து, அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More