Social Activity

100 -நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.20 அதிகம் கூடுதல் கூலி வழங்கப்படும்.

இதன்படி அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ.2,000 கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு அவர்களுக்குக் கிடைக்கும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்காக, ரூ.21,032 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 13.62 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை கிடைக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top