சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட கரோனா பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)