Advertisement
Categories: Uncategorized

உலகக்கோப்பை – இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு ஜாக்பாட்.. இந்தியா நிலை என்ன?

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிர்ஷ்டம் கிடைக்குமா? என பாகிஸ்தான் அணி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.

நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான போட்டி மழையால் கை விடப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி ஆடப் போகிறது என்பதும் இந்தப் போட்டியில் மழை வருவதை பொறுத்தே அமையும்.

பெங்களூரில் நடைபெறும் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறி உள்ளதுதான் இந்த எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம்.

கடந்த நான்கு நாட்களாக பெங்களூரில் மழை பெய்து வருவதால் அங்கே மஞ்சள் நிற மழைக் கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், போட்டி தடைபட வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளன. சிறிய மழை என்றால் அரைமணி நேரத்தில் ஆடுகளம் மீண்டும் போட்டிக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது. ஆனால், பெருமழை பெய்தால் போட்டி கைவிடப்பட வாய்ப்பு அதிகம்.

அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு கிடைக்கும். எப்படி என்றால், தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேற போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் ஒரே மாதிரியாக 8 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகள் பெற்று உள்ளன. மூன்று அணிகளுக்கும் லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளன. அதில் நியூசிலாந்து அணி தன் கடைசி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆடுகிறது. இந்தப் போட்டியில் மழை வந்து போட்டி கை விடப்பட்டால் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி மட்டுமே வழங்கப்படும். அப்படி நடந்தால் நியூசிலாந்து அணி 9 புள்ளிகள் மட்டும் பெறும்.

மறுபுறம், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும். அதே போல, ஆப்கானிஸ்தான் அணி, வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் தோற்றால் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கள் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று, நியூசிலாந்து அணியை முந்தி விடும். அப்போது ஆப்கானிஸ்தான் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கி இருப்பதால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு ஏற்படும்.

எனவே, நியூசிலாந்து அணி, இலங்கை அணியை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், பாகிஸ்தான் மற்றும், ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி தற்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னணியில் இருப்பதால், அந்த அணி 9 புள்ளிகள் மட்டும் பெற்றால் பாகிஸ்தான் அணி வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைக்கும். அப்படி நடந்தால் இந்திய அணியுடன், பாகிஸ்தான் அணி அரை இறுதியில் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

2 days ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

4 days ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

6 days ago

ஓடிடியில் யூத் எப்போது? OTT release of the film Youth

யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல்… Read More

6 days ago

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 months ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 months ago